பேரவையை அரசியல் பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது : கருணாநிதி பற்றி கூறிய நயினார் நாகேந்திரன்.. சட்டென எழுந்த முதல்வர்!

பேரவையை அரசியல் பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது : கருணாநிதி பற்றி கூறிய நயினார் நாகேந்திரன்.. சட்டென எழுந்த முதல்வர்!

ஆளுநர் திருப்பிய அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடியது.

முதலில் பாஜக பங்கேற்காது என்ற தகவல் வெளியான நிலையில், நயினார் நாகேந்திரன் அதை மறுத்தார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார், சபாநாயகர் அவர்களே, நீங்கள் இந்த சபை ஆரம்பிக்கும்போதே, மத்திய அரசையோ, ஆளுநரையோ குறைத்து பேசக்கூடாது என்றீர்கள்.

ஆளுநரை பற்றியே பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, அவருக்கு எதிராகவே இங்கு பேசுபவர்களை பேசவிட்டுவிட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். தீர்மானங்கள் என்பது வேறு.. அவைகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்பது வேறு விஷயம்?

இந்த சட்டமன்றம் ஒரு மாண்பும், மரபும் மிக்கது. இதை பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.. இங்கு முதல்வர் பேசியிருந்தார்.

ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் நிதானமாக பேசினார். ஆனால், இங்கு பலரும் அப்படியில்லை.. ஆளுநர் குறித்து நிதானமில்லாமல் பேசுகிறார்கள்.

கருத்து வேறுபாடு பல இருக்கலாம்.. ஆனால், வேந்தர்களை நியமனம் செய்வது என்பது, ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கடந்த 1968-ல் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார்.. ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இயற்றப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடானது என்றே நான் நினைக்கிறேன்..

இந்த அரசாங்கம் கூர்மையான போக்கு கடைப்பிடிக்க வேண்டும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார் நயினார் நாகேந்திரன்.

ஆளுநர்தான், துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறாரே என்று நயினார் சொன்னதுமே, திடீரென குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர்கள், அப்போதெல்லாம் அரசுடன் பேசித்தான் துணைவேந்தர்களை நியமிப்பார்கள் என்று விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மீண்டும் திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுடன், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்ற “வார்த்தையையும்” சுப்ரீட் கோர்ட் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும்நிலையில், இன்றைய மசோதாக்களும் ஒப்புதல் தந்தாக வேண்டிய சூழலை, இன்று ஆளுநர் மாளிகைக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.