தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!
நாளைக்கு தீபாவளி 15 நாளா தண்ணீர் வரல, இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு குடிநீர் வராவிட்டால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை விராலிமலை மீது எப்போதும் தனி கவனம் செலுத்தக்கூடியவர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்த போதே ஆயிரம் பணிகள் இருந்தாலும் விராலிமலை மக்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஒதுக்கிவிடுவார்.
எளிமையா எல்லோரிடமும் பேசி பழகும் விஜயபாஸ்கர், தனது தொகுதியில் இருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் சென்று விடுவார்.
இதனாலயே தொடர்ந்து 3வது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர்.
இந்த நிலையில் தான் 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என விராலி மக்கள் புகார் கொடுத்ததையடுத்து, சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிக்கு போன் போட்ட விஜயபாஸ்கர், 15 நாளா தண்ணீர் வரல, என்ன விளையாடுறீங்களா? காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தருகிறோம் என சட்டசபையில் மட்டும் அமைச்சர் பேனில் போதுமா? தண்ணீர் எங்கே என போனில் ஸ்பீக்கர் போட்டபடி பேசினார்.
இதையடுத்து விஜயபாஸ்கர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரி, ஒரு கட்டத்தில் அண்ணே தண்ணர் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம், கொடுத்திடலாம் அண்ணே என கூறி சரண்டர் ஆனார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.