தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் 120வது பிறந்த நாள் இன்று (ஜூலை 14) கல்வித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காமராஜர் 120-வது பிறந்தநாளையொட்டி, காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசிடம் ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்குவோம் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கல்வி திருநாள் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் கல்வி திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்கக் கூடாத ஒப்பற்ற தலைவர் காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று கிடக்கிறது.
இந்த நினைவிடத்தை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி ஒளி, ஒலி காட்சிகள் அமைத்து தோட்ட அமைப்புகளையும், வண்ண செடிகளின் அமைப்புகளையும் மேம்படுத்தி, மக்களை கவரும் வண்ணமாக அமைத்திட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இதற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.1 கோடி நிதி திரட்டி முதல்-அமைச்சரிடம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அப்படி அவர்களால் நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் தமிழக பா.ஜ.க.வுக்கு தமிழக அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, அவரது நினைவை மக்கள் போற்றும் விதமாகவும், காமராஜர் நினைவிடத்தை மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் மாற்றுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர், காங்கிரஸ் முத்த தலைவர் மறைந்த காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.