ரஷ்யாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்சூகாவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் எனும் இசை அரங்கில் பிரபல இசைக்குழு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், அரங்கிற்குள் திடீரென ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல், கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீவைத்தும் தாக்குதலை நடத்தியது. இதனால், உள்ளே இருந்தவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். மேலும், தீவிபத்தில் அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “இந்த தாக்குதல் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.100க்கும் மேற்பட்டோர் படுகாயமம் அடைந்துள்ளனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.