மதுரையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு சென்ற போது தன்னை பார்க்க வந்த ஆதினத்தை பாதுகாவலர்கள் தடுத்த போது, பிரதமர் மோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனியார் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வரவேற்பு அளித்த போது, அதில் மதுரை ஆதினமும் கையில் பொன்னாடையோடு நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்தனர்.
இதனை பார்த்த பிரதமர் மோடி, மதுரை ஆதீனத்தை அனுமதிக்குமாறு சொல்லி, அழைத்து நலம் விசாரித்தா. அப்போது, சால்வையை பிரதமர் மோடிக்கு அணிவித்து மதுரை ஆதினம் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம், “நான் மோடி அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியே மீட்டு தர வேண்டும். தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் நான் தமிழில் கோரிக்கை வைத்தேன். எனக்கு ஹிந்தி தெரியாது என்பதனால், அவர் என்னிடம் நன்றாக இருக்கின்றீர்களா என்று கேட்டார்.
நான் பொன்னாடை போற்றினேன், மற்ற பிரதமரை விட இவர் முக்கியமானவர் பாதுகாப்பு கருதி, என்னை பாதுகாவலர்கள் அருகில் விடவில்லை. அவர் வர சொன்னதில் நான் சென்றேன். வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும்.
மீண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் வருவார் என்று அவரிடம் கூறினேன் மகிழ்ச்சி அடைந்தார். ஆன்மீகப் பிரதமராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று ஆதீனம் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.