தன்னை வரவேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை பிடித்து தோளை தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி சுமார் ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
முதலில் ஆளுநர் ஆர்.என். ரவி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சால்வை அணிவித்து பிரதமரை வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி ஆகியோர் வணக்கம் தெரிவித்து பிரதமரை வரவேற்றனர். அவர்களுக்கு பிரதமர் வெறும் வணக்கத்தை மட்டும் தெரிவித்து விட்டு, அப்படியே நகர்ந்து சென்றார்.
ஃப்ரொட்டகால் படி அடுத்தடுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றார். அப்போது, அவரை கண்டு நெகிர்ந்து போன பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் கைகளை பிடித்து, தோளை தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார்.
சிறிது நேரம் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பிரதமர் மோடி, அதன் பின் நகர்ந்து சென்று தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தார்.
என்னதான், ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களின் வரவேற்பை வழக்கமான முறைப்படி பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டாலும், தங்களது கூட்டணி கட்சி தலைவர்களிடம் நெருக்கம் காண்பித்தது திமுகவினரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி நெருக்கம் காட்டியது, தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவின் உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக இருகட்சியினரும் கூறி வருகின்றனர்.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.