பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வரும் அவர் 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிறகு மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க இருக்கிறார். இதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ஓபிஎஸ்ஸின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.