பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திருவனந்தபுரத்தில் நாளை வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க மாநில அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பாஜக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரனுக்கு மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று வந்திருந்தது. கொச்சியை சேர்ந்த ஜோணி என்பவர் பெயரில் வந்த அந்தக் கடிதத்தில் கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ந்து போன பாஜகவினர் உடனடியாக இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கேரள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கி, நேற்று மிரட்டல் கடிதம் எழுதியவரை மடக்கி பிடித்தனர். கொச்சியை சேர்ந்த சேவியர் என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் வர்த்தகம் செய்து வரும் இவர், ஜோணி என்பவர் மீது தனக்கிருந்த தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்காக, அவரை போலீஸில் சிக்க வைப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை அறிவியல் பூர்வமாக விசாரித்து, கொலை மிரட்டல் கடிதம் எழுதியவரை கைது செய்துள்ளோம். இது ஒரு தனிப்பட்ட பகை தொடர்பானது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என குற்றவாளி விரும்பி இருக்கிறார்’ என தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.