பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திருவனந்தபுரத்தில் நாளை வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க மாநில அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பாஜக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரனுக்கு மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று வந்திருந்தது. கொச்சியை சேர்ந்த ஜோணி என்பவர் பெயரில் வந்த அந்தக் கடிதத்தில் கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ந்து போன பாஜகவினர் உடனடியாக இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கேரள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கி, நேற்று மிரட்டல் கடிதம் எழுதியவரை மடக்கி பிடித்தனர். கொச்சியை சேர்ந்த சேவியர் என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் வர்த்தகம் செய்து வரும் இவர், ஜோணி என்பவர் மீது தனக்கிருந்த தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்காக, அவரை போலீஸில் சிக்க வைப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை அறிவியல் பூர்வமாக விசாரித்து, கொலை மிரட்டல் கடிதம் எழுதியவரை கைது செய்துள்ளோம். இது ஒரு தனிப்பட்ட பகை தொடர்பானது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என குற்றவாளி விரும்பி இருக்கிறார்’ என தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.