பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் பதக்கத்தோடு வருவார் என இந்தியர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் ஒவ்வொரு இந்தியரையும் பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாக 2 கிலோ எடையுடன் இருந்துள்ளார் வினேஷ் போகட். இதையடுத்து சில நாட்களாக இரவு முழுக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத் 1.900 கிலோ கிராம் எடையை குறைத்துள்ளார்.ஆயினும் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகுதி நீக்கம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.அதே சமயம், நீங்கள் தன்னம்பிக்கையோடு உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக நிற்க காத்து இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.