திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை வழங்குகின்றன.
இதனால் மெட்ரோல் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோட இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க: கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!
இது தொடர்பாக அவர் தனது X தளப்பக்கத்தில், ‛இது ஒரு கேலிக்கூத்து. கேலிக்கூத்தர்கள் ஒவ்வொருவரும் யார் முதலிடத்துக்கு வருகிறோம் என்பதற்காக போட்டியிடுகின்றனர்.
மேலும் இந்த காட்சி என்பது பிரதமர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை விளக்குகிறது.
மேலும் அங்குள்ள Court Jesters, ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டு இருந்திருந்தால் தர்க்க ரீதியாக உடனே சில கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும்.
அதில் முதலாவது கேள்வி இப்படி ஏதாவது ஒரு இடம் உள்ளதா? A.ஒரு இடத்தில் மெட்ரோ சேவை மட்டுமே இருந்து பஸ் சேவைகள் இல்லாமல் இருக்கிறதா? B.பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள், வயதானவர்கள், மாதந்திர பஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையா? C. பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா? என கேட்டிருக்க வேண்டும்.
அதேவேளையில் சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான மெட்ரோ திட்ட அறிவிப்புகள்/ஒப்புதல்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ பணியை மெதுவாக்கும் செயலா? அதேவேளையில் மெட்ரோவில் ஒருவர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாது? என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம் என விமர்சனம் செய்த பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.