சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பேருந்து நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவிட்டு மேடை அருகே வந்தார்.
அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென அனைவரும் மேடை மீது ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை சுதாரித்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ், மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதனால், எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சிறிய அளவு டேபிள் மூலம் உயரமாக நின்று தனது பொதுக்கூட்ட பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடர்ந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.