கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மீது பெங்களூரூ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், குமாரசாமி கட்சிக்கும் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அன்பரசனையும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக குமாரையும் நிறுத்தினர். கூட்டணி கட்சியான பாஜக கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார். இதனிடையே, முறையான தகவல்கள் இடம்பெறவில்லை எனக் கூறி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக பெயரில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மேற்கொண்டு அதிமுக பெயரை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.