கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மீது பெங்களூரூ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், குமாரசாமி கட்சிக்கும் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அன்பரசனையும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக குமாரையும் நிறுத்தினர். கூட்டணி கட்சியான பாஜக கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார். இதனிடையே, முறையான தகவல்கள் இடம்பெறவில்லை எனக் கூறி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக பெயரில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மேற்கொண்டு அதிமுக பெயரை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.