நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் மதுரை, தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகராக இருக்கிறார். சமூக அரசியல் தொடர்பான கருத்துகளையும் வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சாடி உள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். வயதான எனது பெற்றோர் கொண்டு வந்த பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள்.
தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர். வேலையற்றவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.