ஈரோடு – பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவசுப்ரமணி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. களக்காடு கொலை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியான இவர், தனது கூட்டாளிகள் 4 பேருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பெருந்துறையை அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நெல்லை தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆண்டோ தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், அங்கு பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தினர்.
உடனே தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சிவசுப்ரமணியின் 2 கூட்டாளிகள் குண்டு அடிபட்டது. அவர்களை போலீசார் சுட்டு பிடித்தனர். ரவுடி சிவசுப்ரமணி மற்றும் அவரது 2 கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பினார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்க வந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.