ஈரோடு – பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவசுப்ரமணி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. களக்காடு கொலை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியான இவர், தனது கூட்டாளிகள் 4 பேருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பெருந்துறையை அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நெல்லை தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆண்டோ தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், அங்கு பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தினர்.
உடனே தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சிவசுப்ரமணியின் 2 கூட்டாளிகள் குண்டு அடிபட்டது. அவர்களை போலீசார் சுட்டு பிடித்தனர். ரவுடி சிவசுப்ரமணி மற்றும் அவரது 2 கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பினார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்க வந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.