இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே புரத்தில் நடந்த கலைத்திருவிழா எனும் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்த அவர், அதில் இந்து கடவுள்களான ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமன், சீதையை இழிவுபடுத்தும் விதமான வரிகளை கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி சுரேஷ் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிகப்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.