இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே புரத்தில் நடந்த கலைத்திருவிழா எனும் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்த அவர், அதில் இந்து கடவுள்களான ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமன், சீதையை இழிவுபடுத்தும் விதமான வரிகளை கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி சுரேஷ் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிகப்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.