மின் கட்டண உயர்வு; இதுதான் விடியல் அரசா? சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்,..

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மின் கட்டண உயர்வை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.மேலும், “திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் க கிருஷ்ணசாமி குறிப்பிடும் போது தமிழகத்தில் மீண்டும் கடும் மின் கட்டண உயர்வு!
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இதுதான் இந்த அரசு கொடுக்கும் பரிசா?

தமிழக மக்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வாலும், ஏற்கனவே தமிழக அரசால் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வுகளாலும் பெரும் துன்பப்பட்டு வருகிறார்கள்! இந்நிலையில் குடிசை வாசிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து மின் பயன்பாட்டாளர்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல; மின்கட்டண உயர்வு கடும் கண்டனத்துக்குரியதாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக ஆளும் தரப்பினருக்கு வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு தான் ஆட்சியாளர்கள் தரும் பரிசா? உடனடியாக மின் கட்டணத்தை உயர்வை திரும்ப பெற புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் தேதி அறிவித்திருப்பதில் இருந்தே உணரலாம் என கூறியுள்ளார். மின் வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகளை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை எனவும், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக அவதியடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Sudha

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

12 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

56 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.