தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55 ஆம் ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கம்பன் வட மொழியையும் படித்து கம்ப ராமாயணத்தை எழுதியுள்ளார் என்றும், தாய்மொழி தான் உயிர், அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு என்றும் கூறினார்.
மேலும், பிற மொழி கற்பது தவறு இல்லை என்றும் தெரிவித்த அவர், தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குவதாகவும், ஜிப்மரில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்றும், தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது, என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.