விஜயகாந்த் மறைவு குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியதை கேட்டு அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா கண்கலங்கினார்.
கடந்த 28ம் தேதி தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கு இருந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.
மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை என்றும், உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருப்பதாக கூறிய அவர், திடீரென விஜயகாந்த் குரலில் பேசினார். “என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன். நான் உன்ன விட்டு எங்கயும் போகல,” என கூறினார். இதைக் கேட்டு பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.