அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி… தே.ஜ. கூட்டணியின் கூட்டத்தில் இபிஎஸ்க்கு ‘மாஸ்’ பதவி!!

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், 2-வது கூட்டம் பெங்களூரில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் முழு வீச்சில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நீண்ட காலமாக கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, (யுபிடி) அகாலிதளம் ஆகிய கட்சிகள் வெளியேறியதால் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நிலையில், உள்ளது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் கோஷ்டியின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் புதிதாக இணைத்துள்ளது.

இந்த நிலையில், தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக இன்று அழைப்பு விடுத்தது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனிடையே, இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை ஓட்டல் வாசலுக்கே வந்து ஜேபி நட்டா வரவேற்றார். அது மட்டும் இன்றி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

அதேபோல், கூட்டணி தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல் வரிசையில் நின்றதை காண முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தென் இந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமியை பிரதமர் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.