தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் தந்தை உயிரிழந்தது தொடர்பாக நேரில் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தேன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலுமாக சீர்கெட்டுபோய் உள்ளது. அன்றாடம் கொலை, கொள்ளை என அரங்கேறி வருகின்றது
தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே கிடையாது
இதுவரை ஜனவரி மாதத்தில் இருந்து 595-கொலைகள் நடைபெற்று உள்ளது. அன்றாட சம்பவமாக கொலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
காவல்துறையை ஏவல்துறையாக வைத்துள்ளது திமுக அரசு.
காவல்துறைக்கு முழு அதிகாரத்தை திமுக வழங்க வேண்டும். ஆடு,மாடுகளை வெட்டும் கசாப்பு கடைபோல் தமிழகம் செயல்பட்டு வருகின்றது.
கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகாரத்து வருகின்றது வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருள் வருகின்றது அதனை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இளைஞர்கள் போதை பழக்க்கதிற்கு அடிமைதாகி வருகின்றனர் இதனை அரசு வேடிக்கை பார்ப்பது என்பதை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கொலைகள் நடந்துள்ளது இதுவரை கொலையாளிகள் சரியாக கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பெண்கள், என யாருக்கும் பாதுகாப்பு என்பது இல்லை. மக்கள் மத்தியில் திமுக மீது வெறுப்பு அதிகரித்து உள்ளது அதனால்தான் நேற்று மத்திய அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. வரப்போகும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026-சட்டமன்ற தேர்தல் ஆகியவைகளில் வெற்றிபெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஆக்க பூர்வமான முடிவுகளை எடுப்போம்.
பாஜக உடன் கூட்டணி என்பது இனி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் ஆட்சி செய்தபோது பல திட்டங்களில் ஒன்றான கால்நடை ஆராய்ச்சி மைய்யம் 1000-கோடி ரூபாயில் கொண்டு வந்தோம்
தமிழகத்தில் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பூங்கா பாழடைந்த கிடக்கின்றது.
சிவகங்கையில் திமுக நிர்வாகி ஒருவர் அரசு ஊழியரை நாற்காலியை தூக்கி அடிக்கின்றார் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுக்காப்பு என்பது இல்லாமல் இருக்கின்றது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.