ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரா அந்த நாட்டு ஜெர்சியை போட்டு பாக்., ஜிந்தாபாத்னு கூவுறாங்க : ஆபத்துல முடியும்… அண்ணமலை வார்னிங்!!

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரா அந்த நாட்டு ஜெர்சியை போட்டு பாக்., ஜிந்தாபாத்னு கூவுறாங்க : ஆபத்துல முடியும்… அண்ணமலை வார்னிங்!!

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து அவர் சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆட்சி நடக்கிறது. அதுதான் ஜனநாயகம் என நினைக்கிறார்கள்.

பழங்குடியின மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தை சேர்ந்தவர் இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியது.

படித்த இளைஞர்களுக்கு எதிரான அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வரை பொறுத்தவரை குடும்ப மட்டுமே நன்றாக இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பாஜக ஆட்சி என்பது அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி.

திமுக ஆட்சி மகன், மருமகனுக்கான ஆட்சி. ஊழல் குறித்து திமுக பேசக் கூடாது. திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது திமுகவினர் பாகிஸ்தான் டீசர்ட் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர்.

திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காகவே தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுவரை நடக்காத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கடந்த 25 ஆம் தேதி மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

8 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

9 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

9 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

9 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

10 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

11 hours ago

This website uses cookies.