புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என அங்குள்ள மக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
10பேரில் சிலர் தனியார் மருத்துவமனையிலும், சிலர் அரசு மருத்துவமனையிலும், ஒரு சிலர் நாட்டு மருந்து வைத்தியத்தையும் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்கள் மஞ்சள் காமாலை தொற்றால் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.நோய்த் தொற்றை கண்டறியவும் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயலோக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொது மக்கள் இது குறித்து அச்சமைடய தேவையில்லை எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் சொல்லி உள்ள மாவட்ட நிர்வாகம் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.