விஞ்ஞான ஊழலின்‌ பிறப்பிடம் திறனற்ற திமுக.. வசூல் வேட்டைக்கு பிறகு வனமண்டலங்களில் மீண்டும் குவாரிகளா..? அண்ணாமலை கடும் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 4:12 pm
Quick Share

சென்னை : பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுயநல நோக்கத்துடன்‌ செயல்படும்‌ திறனற்ற திமுக அரசு தனது ஆட்சி காலம்‌ முடிவதற்கு
முன்பு தமிழகத்தின்‌ மொத்த வளத்தையும்‌ சூறையாடி விட வேண்டும்‌ என்று
முடிவெடுத்துள்ளதா என்ன?

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 10 கிலோ மீட்டருக்கு குவாரிகள்‌ இயங்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும்‌ தடை விதித்துள்ளது. தமிழக அரசு 14.12.2022 அன்று வெளியிட்டிருக்கும்‌ அரசாணை மீறுகிறது. இதை நாம்‌ புரிந்து கொள்ள சற்று பின்‌ நோக்கி செல்ல வேண்டும்‌.

ஜனவரி 2002 – தேசிய பூங்கா மற்றும்‌ சரணாலயங்களை சுற்றி 10 கிலோ மீட்டர்‌ சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட வனமண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்‌ என்ற விதிமுறைகளை வெளியிட்டது.

பிப்ரவரி 2011 – மத்திய சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வன அமைச்சகம்‌ பாதுகாக்கப்பட்ட வனமண்டலங்களை உருவாக்க புது விதிமுறைகளை வவளியிட்டது.

ஜுன்‌ 2022 – மாண்புமிகு உச்சநீதிமன்றம்‌ 2011ஆம்‌ ஆண்டு வழங்கப்பட்ட விதிமுறைகளின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில்‌ ஒரு கிலோமீட்டர்‌ சுற்றளவு வரை பாதுகாக்கப்பட்ட வனமண்டல விதிமுறைகளை அனைத்து மாநில அரசும்‌, கட்டாயமாக பின்பற்ற வேண்டும்‌ என்ற தீர்ப்பை வெளியிட்டது.

டிசம்பர்‌ 14, 2022: இதற்கு முன்பு தமிழக சுரங்கங்கள்‌ மற்றும்‌ கனிமங்கள்‌ துறை வெளியிட்ட அரசாணையில்‌ பாதுகாக்கப்பட்ட வனப்‌ பகுதிகளுக்கு வெளியே 1 கி.மீ. சுற்றளவு வரை குவாரிகள்‌ இயக்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ்‌ வாங்கி, தற்போது மீண்டும்‌ அனுமதி வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு.

ஆட்சிக்கு வந்த பின்‌ குவாரிகளிடம்‌ இருந்து வசூல்‌ வேட்டையை துவங்க உருவாக்கப்பட்ட வழிமுறை தான்‌ 2021 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ வெளியிடப்பட்ட அரசாணை. தடை விதித்த பின்‌ அனைத்து குவாரி முதலாளிகளிடமும்‌ வசூல்‌ வேட்டை நடத்தியுள்ளது திறனற்ற திமுக. தற்போது வசூல்‌ முடிந்தவுடன்‌ தாங்கள்‌ பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள்‌ இயங்க அனுமதி வழங்கியுள்ளது. விஞ்ஞான ஊழலின்‌ பிறப்பிடமான திறனற்ற திமுக.

தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும்‌ அரசாணையை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள்‌ இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும்‌ என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின்‌ கோரிக்கையாகும்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 263

0

0