தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகள் இந்த
கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இவ்வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத், வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத், திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது
இன்று தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.