சென்னை : ரேஷன் கடைகளில் ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் எண்ணெய், சர்க்கரை, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சிறு தானியங்களையும் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு அண்மையில் பரிசீலனை செய்து வந்தது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, அதனை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் விதமாகவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டும் வகையிலும் தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.