கூட்டணி முறிவால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக ஒருமனதாக முடிவெடுத்தது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அறிக்கை வெளியிட்டது. அதில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர், “பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து சந்தேகப்பட வேண்டாம். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துவிடுமோ என்ற சந்தேகமே வேண்டாம். மக்களுக்கு சந்தேகம் இருந்தால் கட்சியின் கருத்தை உறுதியாக எடுத்து செல்லுங்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார்’ என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.