கோவையில் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 பஞ்ச் மற்றும் 50,000 ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.
கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 கராத்தேவின் பஞ்ச் எனப்படும் குத்து முறையை ஐம்பதாயிரம் முறையும், இதனை தொடர்ந்து பதினைந்து நிமிடங்களில் கையில் ஒற்றை சிலம்பத்தை ஐம்பாதயிரம் முறை சுற்றியும் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சி கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பாக நடைபெற்றது. ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலான மாணவ,மாணவிகள் சீரான இடை வெளியில் ஆறு வரிசைகளில் நின்று இந்த சாதனையை செய்து அசத்தினர்.
ஐம்பதாயிரம் பஞ்ச் மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்று எண்ணிக்கையில் செய்த இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்த குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரிவித்தார். இதில் நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ்,மாஸ்டர் பஞ்சா,மாஸ்டர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.