நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நெரிசல் காரணமாக 8 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா இன்று காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். கோயிலுக்கு வெளியே அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நேற்று இரவு நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காகவே அதிக தொண்டர்களை வரவழைத்து கட்டுக்கடங்காத கூட்டத்தை கூட செய்து நடைபெற்ற துயரத்திற்கு காரணமாக அமைந்து விட்டார். சரியான விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு முழு காரணம் சந்திரபாபு நாயுடு மட்டும்தான். இதனால் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
அதேபோல் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 கோடியும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.