காமராஜர் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஜி.கே.வாசன், பதவிக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பமாக இருக்கும் கட்சி த.மா.கா, கூட்டணிக்கு கை கொடுக்கும் கட்சி த.மா.கா என தெரிவித்தார். தமாகாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது அங்கீகாரம் இழந்துள்ளனர்.
தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி என கூறிய அவர் திமுக ஆட்சியில் கொலை , கொள்ளை மட்டுமே நடந்து வருவதாக விமர்சித்தார். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் நலிந்தோர் நலவாழ்வு பெற்றார்கள், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களை எளிதில் சந்திக்கலாம், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளதாக கூறினார். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் சாதனை படைத்து வருகின்றனர்.
எனவே இதனை புரிந்து திமுக அரச இனி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டு கால தாமதமாக வழங்கும் மகளிர் உரிமைத்தொகையில் ஏன் இத்தனை பாகுபாடு என கேள்வி எழுப்பியவர், இரண்டு கோடி பெண்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகை வழங்க முடியாத திமுக அரசு ராஜினாமா செய்யட்டும் என கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்தது. இன்னும் 7 மாதங்களில் பொங்கல் வருகிறது. குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் முதலில் போராட்டம் நடத்தும் இயக்கமாக த.மா.கா. இருக்கும் என கூறினார்.
தமிழகத்தில் அனைத்து நிலையிலும் போதை தலைவிரித்தாடுகிறது. 2 ஆண்டுகளாக அதை தடுக்க முடியாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைவுக்கு டாஸ்மாக் மட்டுமே காரணம்.
தமிழகத்தில் நடப்பது டாஸ்மாக் மாடல் ஆட்சியாக உள்ளதாக தெரிவித்தவர், வரும் தேர்தலில் திமுகவை அகற்ற பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அனைத்து மாநிலம் , அனைத்து மக்களும் , இந்தியா முன்னேற வேண்டும் என்ற கொள்கையோடு பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.