ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டு 7ம் வகுப்பு பள்ளி தேர்வில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பருவ தேர்வுகளை அம்மாநில கல்வி வாரியம் நடத்துகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கான வினாத்தாள்களை அரசு கல்வி வாரியமே தயார் செய்து வருகிறது.
இப்படியிருக்கையில், தற்போது நடைபெற்ற 7ம் வகுப்பு தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள வினா ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கீழ்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேள்விக்கு, உதாரணமாக சீனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்றால், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்களை எவ்வாறு அழைக்கப்படுவார்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. இது முழுக்க முழுக்க மனித தவறு,” எனக் கூறினார். இது குறித்து பதிலளிக்க மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.