ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டு 7ம் வகுப்பு பள்ளி தேர்வில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பருவ தேர்வுகளை அம்மாநில கல்வி வாரியம் நடத்துகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கான வினாத்தாள்களை அரசு கல்வி வாரியமே தயார் செய்து வருகிறது.
இப்படியிருக்கையில், தற்போது நடைபெற்ற 7ம் வகுப்பு தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள வினா ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கீழ்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேள்விக்கு, உதாரணமாக சீனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்றால், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்களை எவ்வாறு அழைக்கப்படுவார்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. இது முழுக்க முழுக்க மனித தவறு,” எனக் கூறினார். இது குறித்து பதிலளிக்க மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.