திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு : ரூ.400 கோடி போலி ரசீதுகள் பறிமுதல்!!
தி.மு.க.,எம்.பிஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.400 கோடிக்கு போலி ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து வருமானவரித்துறை தெரிவித்து இருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் நடந்த பல்வேறு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.400 கோடி போலி ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுபான ஆலைகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது கல்வி கட்டணம் பெற்றது தொடர்பான ரூ.400கோடிக்கான ரசீதுகளும் கணக்கில் வரவில்லை. மத்திய அரசின் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் ரூ.25கோடி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இடைத்தரகர்களிடம் இருந்து மாணவர் சேர்க்கைக்காக ரூ.25 கோடி பெறப்பட்டதாக ஆவணங்கள் சிக்கிஉள்ளது. சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ.32 கோடிரொக்கம் மற்றும் ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுளள்து.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணைதொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது. ஜெகத்ரட்சகன் அறக்கட்டளையில் இருந்து ரூ.300கோடி அளவிற்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவை சேர்ந்த முக்கிய குழுமத்திற்கு பணம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.