கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி 2023 முன் விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேரை புகாரின் பேரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற எஸ்எஸ்ஐ சிவகுமார் காவல் நிலையத்தில் வைத்து அவர்களை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் நேற்று வெளியாகி வைரலானது.
ஒரு வருடத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானதை அடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்ஐ) வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து தாம்பரம் நகர போலீஸார் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரும்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் வன்முறை வழக்கில் இருவரைக் கைது செய்தனர். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியின்படி, எஸ்எஸ்ஐ குற்றவாளியை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து நீதிமன்ற காவலில் உள்ள அம்மூவரையும் எஸ்எஸ்ஐ சிவகுமார் கடந்த வருடம் தாக்கினாரா?என்பது குறித்து விசாரிக்கப்படும் என தாம்பரம் காவல்துறையினர் அறிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சிவகுமார் அவரின் இந்த கொடூரமான நடத்தைக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.