வீர மரணம் எய்திய 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி, வீர வணக்கத்தை சமர்பிக்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்களில் லட்சுமணன் மதுரை புதுப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வீர மரணம் எய்திய ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வீர மரணம் எய்திய 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி, வீர வணக்கத்தை சமர்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.