காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு சாம்சங் ஊழியர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க வருகை தர உள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: 2 மனைவிகள் இருந்தும் பத்தாது… 14 வயது சிறுமியை 3வதாக திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ : குமரியில் ஷாக்!
எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்னர் என்ற விபரங்களை வெளியிட ண்டும் என சக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் நேற்று நள்ளிரவு போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட பந்தல்களும் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎம் தலைவர் கனகராஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்தது ஏன்? அப்படி என்ன நடந்துவிட்டது, எமர்ஜென்சியா? முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனை என குறிப்பிட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.