காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு சாம்சங் ஊழியர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க வருகை தர உள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: 2 மனைவிகள் இருந்தும் பத்தாது… 14 வயது சிறுமியை 3வதாக திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ : குமரியில் ஷாக்!
எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்னர் என்ற விபரங்களை வெளியிட ண்டும் என சக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் நேற்று நள்ளிரவு போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட பந்தல்களும் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎம் தலைவர் கனகராஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்தது ஏன்? அப்படி என்ன நடந்துவிட்டது, எமர்ஜென்சியா? முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனை என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.