செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைதாகிறார் சவுக்கு சங்கர்? அவரே கொடுத்த அப்டேட்!!!

யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும், தனியார் யூடியூப் சேனல்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில்பாலாஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

சோர்சஸ் என்ற பெயரில் வெளியிட்ட அவரது பல கருத்துகள் மற்றும் முதலமைச்சரின் உடல்நலம் குறித்த அவரது கருத்துகள் திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய கருத்துகளுக்காக சமீபத்தில் தான் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலை சவுக்கு சங்கரே வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கரூர் எஸ்பி சுந்தரவதனத்தின் புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் இன்று இரவு கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக எஸ்பியின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சுந்தரவதனம் தீவிரமாக உதவினார், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததோடு, உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் இரண்டு நாள்களில் வெளியே வர உதவியுள்ளார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால், இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிராக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக தவறான தகவலை வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்த பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளஙக்ளில் இந்த கைது பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இன்று இரவு கைது செய்யப்பட இருப்பதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கம் போல ட்விட்டரில் திமுகவை விமர்சிக்கும் ட்விட்டுகளை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

13 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

2 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

4 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

5 hours ago

This website uses cookies.