சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் வாயுக்கசிவு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள திருவொற்றியூரில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில், இன்று (அக்.25) பிற்பகல் ஏற்பட்ட வாயுக் கசிவால், அப்பள்ளியில் படித்து வரும் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், உடனே பள்ளியின் முன்பு கூடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சி!
ஆனால், அங்கு வந்த பெற்றோர், இன்று காலை 10 மணி முதல் வாயுக்கசிவு வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.