திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான் அரசு பள்ளி, கல்லூரிகளின் தரம் உயரவில்லை என கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கல்வி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய சீமான் கூறியதாவது :- என்னை ஆட்சியில் அமர வைத்தால் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளி, கல்லூரிகளிலேயே படிக்க வைப்பேன். அமைச்சர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்க சொல்வேன். இல்லையென்றால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவேன்.
திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான், தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளின் தரம் உயரவில்லை. காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது.
மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரை மீண்டும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பேன் என்று மேடையிலேயே வேட்பாளரை அறிவித்தார். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.