திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான் அரசு பள்ளி, கல்லூரிகளின் தரம் உயரவில்லை என கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கல்வி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய சீமான் கூறியதாவது :- என்னை ஆட்சியில் அமர வைத்தால் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளி, கல்லூரிகளிலேயே படிக்க வைப்பேன். அமைச்சர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்க சொல்வேன். இல்லையென்றால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவேன்.
திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான், தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளின் தரம் உயரவில்லை. காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது.
மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரை மீண்டும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பேன் என்று மேடையிலேயே வேட்பாளரை அறிவித்தார். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.