தமிழக அரசு ரூ.80 கோடி செலவில் மெரினாவில் நடுக்கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பமான பேனா சின்னத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் அமைக்கப்படும் ‘பேனா’ நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது. கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட சீமானிடம், தமிழக அரசின் பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய சீமான், நான் இருக்கும் வரை அந்த திட்டம் நிறைவேறாது, நான் இருக்கும் வரை நடக்காது.
கண்ணாடி வைப்பீங்க, பேனா வைப்பீங்க,கீழ நோட்டு வைக்கறனு சொல்லுவீங்க.. ஒரு வேளை உதயநிதி முதல்வர் ஆனால், எங்க அப்பா விக் வச்சாருனு அதையும் வைப்பீங்க.. இதெல்லா தேவையில்லாத வேல.. யாரோட காசு? சமாதில வடை, காபி விக்கறதையே நான் திட்டுறேன் என நக்கலாக பதிலளித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சீமான் கருத்துக்கு நெட்டிசன்கள் ஷேர் செய்து விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.