சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து வழக்குப்போட்டது தேவையில்லாதது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மீஞ்சூர் பொதுகூட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான், திராவிடர்களுக்கும், தங்களுக்கும் நடக்கும் சண்டை பங்காளி சண்டை என்றும், நாட்டை நாசமாக்கியவர்கள் காங்கிரஸ் மறறும் பாஜகவினர் என்று கூறினார்.
மேலும், அரசு பணத்தில் சமாதி கட்டுவதாகக் கூறிய அவர், இடிந்த வீடுகளை வீடுகளை கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் சமாதிகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்..? என்றும், வந்தவன் போனவன் எலோருக்கும் சிலை உள்ளதாகவும், அனைத்தையும் பெயர்த்து கடலில் தூக்கி போடுவேன் என்று தெரிவித்தார்.
வஉசி திருவுருவ சிலையை சென்னையில் நிருவுவேன் என்று கூறிய சீமான், தமிழர்களுடைய அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பது கொடுமை என்றும், தமிழர் அல்லாதவர்களை தமிழுக்காக தொண்டு செய்தார்கள் உழைத்தார்கள் என அடையாளப்படுத்துவது கொடுமை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என கூறியவர்கள், வீடு திறப்பு விழாவிற்கு மோடியையும், சிலை திறப்புக்கு வெங்கையா நாயுடுவை நானா கூட்டி வருகிறேன் என்ற அவர், தமிழர்கள் ஒன்றாக இருந்திருந்திருந்தால் தமிழர் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆளமுடிந்திருக்காது என்றும், ஓநாய்களாக திராவிடரா்கள் திரிகிறார்கள், என தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது :- திமுகவின் திராவிட அரசியல் என்து செயல் அரசியலோ, சேவை அரசியலோ அல்ல. அது வெறும் செய்தி அரசியல்தான். இளையராஜாவை வைத்து பாஜகு அரசியல் செய்கிறது. இளையராஜாவுக்கு அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவே ஓட்டுப்போட மாட்டார், என தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.