சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதைக் கண்டித்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் ; மீண்டும் ஒரு முறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான பணிகளை செய்வேன். நான் ஏற்கனவே 1991ல் இந்தியா என்பது கூட்டமைப்பு அல்ல, பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நிரூபித்தவன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது திமுகவுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.