கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு…யுவராஜுக்கு சாகும் வரை சிறை: மற்ற அனைவருக்குமே ஆயுள்…நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்..!!

மதுரை: சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளிகள் உள்பட அனைவருக்குமே ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கொடூர கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வழக்கில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். மேலும் 16 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இச்சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. இந்நிலையில் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கில் மொத்தமாக 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் கோர்ட்டில் 72 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். கடந்த 7 வருட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதாவது பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொடூர கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை , சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் போன்ற 10 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் அறிவித்த தண்டனையில், யுவராஜ், யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குமார், சதிஸ்குமார், ரகு,ரஞ்சித் செல்வராஜ் ஆகிய குற்றவாளிக்ளுக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

12 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

13 hours ago

This website uses cookies.