முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அண்ணாமலை குறித்து பற்றி பேசியது இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் கிளப்ப காரணமாக அமைந்தது.
அதைப்போல, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் அப்போது அமித் ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்து கண்டித்தது போலவும் ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தர்ராஜனை எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.
நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என விளக்கம் கொடுத்து இருந்தார். இருப்பினும், தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது பற்றி அண்ணாமலை தரப்பில் தொடர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள்.
இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். வீட்டில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது ” இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.