நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சி.. ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்கவே முடியாது ; ஆளுநர் ஆர்என் ரவி!!

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மேல்கோட்டைஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சாமி தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி ஆகும். பாரத மாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், தேவி அன்னையின் அருளாட்சி நிறைந்த பகுதியாகவும் முக்கடல் சங்கமிக்கும் இடமாகவும் கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு அவரது வருகை கன்னியாகுமரியில் இருந்தது.

இருமகான்கள்- பாக்கியம்

பின்னர் அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகிற்கு சொல்லும் விதமாக அமைந்தது. எனது(கவர்னர்) கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இரு மகான்கள் ஸ்ரீ ராமானுஜர், மற்றொருவர் விவேகானந்தர் ஆகும். தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தர் கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன்.

இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள் இந்தியாவில் ஆன்மிக புரட்சியை உருவாக்கியுள்ளது. மதத்தின் திறவுகோல்களாக ராமானுஜர், விவேகானந்தரும் இருந்தார்கள். உலக மக்கள் அனைவரும் இவர்களது அருமை உணர்ந்துள்ளளார்கள்.

தீவிரவாதம் உருவாக்க முயற்சி

விவேகானந்தர் தன்னை புதிய மனிதர் என்று அறிந்த அதே இடத்தில் தான் இந்த நிகழ்வில் பங்கேற்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம். இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழ்நிலை உருவாகும் உருவாக்கும். இந்த உரிமைகளை பாரத நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் தீவிரவாத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடியாது. ஆன்மிகத்தை, மக்களையும் பிரிக்க முடியாது.

இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால், தீவிரவாதம் அடிபணிந்து இருக்கும். நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி மிக முக்கியம். நமது நாட்டின் வளர்ச்சி பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம், என்ஜீனியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது நாட்டு மக்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.

ஆன்மிக சிந்தனை- தர்மம்

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பலம். நமது நாட்டின் கலசாரத்தை பல வெளிநாட்டினரும் பின்பற்றி வருகிறார்கள். அதற்கு காரணம் ஆன்மிக சந்தனை, தர்மம் உள்ளிட்டவற்றை நாம் அடிக்கிகொண்டே போகலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற்று முதன்மை நாடாக முன்நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, இவ்வாறு கவர்னர் கூறினார்.

இதனைதொடர்ந்து ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடக நாட்டியம், ராமர் பிறப்பு நாடகம் உள்ளிட்ட கைல நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் , கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமானுஜா் சிலை திறப்பு

நிகழ்ச்சியின் 2-வது நாளான நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பிரதிஷ்டாபன ஹோமம், ராமானுஜர் பாராயணம் மற்றும் மாநாடு நடக்கிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் செய்துள்ளது

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.