திமுகவின் தேர்தல் முறைகேடுகளை முறியடித்த எஸ்பி வேலுமணி… அதுக்கு பழிவாங்கவே லஞ்ச ஒழிப்பு ரெய்டு : ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்…

சென்னை : திமுகவின் இந்த மிரட்டலால் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சோர்ந்து போய்விட மாட்டார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மக்களுக்குத்‌ தொண்டாற்றுவதிலும்‌, அரசியல்‌ பணிகளிலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ அர்ப்பணிப்புக்கும்‌, உழைப்புக்கும்‌ முன்‌ நிற்க இயலாத திமுக அரசு, தனது தோல்விகளை மறைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது மீண்டும்‌ மீண்டும்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌, கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, கோவை புறநகர்‌ தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான எஸ்பி வேலுமணி அவர்கள்‌ மீது பொய்க்‌ குற்றச்சாட்டுகளைச்‌ சுமத்தி, மக்கள்‌ மத்தியில்‌ அவப்பெயரை ஏற்படுத்தும்‌ நோக்கத்தோடு வேலுமணி அவர்கள்‌ தொடர்புடைய இடங்களில்‌
லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில்‌ களங்கத்தை அள்ளி வீசும்‌ கண்ணியக்‌ குறைவான நடவடிக்கையில்‌ இறங்கிய திமுக அரசு, மீண்டும்‌ திரு. வேலுமணி அவர்களைக்‌ குறிவைத்தும்‌, சிங்காநல்லூர்‌ தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர்‌ ஜெயராம்‌ உள்ளிட்டோரைக்‌ குறிவைத்தும்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கைகள்‌ பலவற்றை மேற்கொண்டிருக்கிறது.

இந்த முறையற்ற அரசியல்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கைகளை வன்மையாகக்‌ கண்டிக்கின்றோம்‌. திமுக அரசின்‌ உள்நோக்கத்தை மக்கள்‌ உணார்ந்திருக்கிறார்கள்‌ என்பதை ஆட்சியாளர்கள்‌ அறிந்துகொள்ள வேண்டும்‌.

நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ கோவை மாவட்டத்தில்‌ அன்புச்‌ சகோதார்‌ வேலுமணி அவர்கள்‌ துடிப்புடன்‌ செயல்பட்டு கழகப்‌ பணிகள்‌ ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல்‌ தற்போது அவர்மீது குறிவைத்துத்‌ தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ கோவை மாவட்டத்தில்‌ நகராட்சி, பேரூராட்சி மன்றத்‌ தலைவர்‌
பதவிகளுக்கான மறைமுகத்‌ தேர்தல்களில்‌ திமுக-வினரின்‌ ஆள்தூக்கி நடவடிக்கைகளையும்‌, முறைகேடுகளையும்‌, வீரத்துடன்‌ எதிர்த்துப்‌ போராடிய வேலுமணி அவர்களை முடக்கிப்‌ போடவே அவர்‌ மீதும்‌, அவர்‌ தொடர்புடைய இடங்களிலும்‌ இன்று லஞ்ச ஒழிப்புத்‌ துறையின்‌ சோதனைகள்‌ நடத்தப்படுகின்றது என்பதை அரசியல்‌ தெரிந்த அனைவரும்‌ நன்கு அறிவார்கள்‌.

சகோதரர்‌ வேலுமணி அவர்கள்‌ ஆயிரம்‌ சோதனைகள்‌ வந்தபோதும்‌, அதனை எதிர்த்து நிற்கும்‌ ஆற்றல்‌ கொண்டவர்‌. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ உறுதிமிக்க தொண்டர்களில்‌ ஒருவரான வேலுமணி அவர்கள்‌, திமுக அரசின்‌ இத்தகைய பழிவாங்கும்‌ நடவடிக்கைகளால்‌ சிறிதும்‌ தொய்வடைந்துவிடமாட்டார்‌; அவருடைய கழகப்‌ பணிகளும்‌, மக்கள்‌ தொண்டும்‌ தொய்வில்லாமல்‌ தொடரும்‌ என்பதை கழகத்‌ தொண்டர்களும்‌, கோவை மாவட்ட மக்களும்‌ நன்கு அறிவார்கள்‌.

திமுக அரசின்‌ தீய முயற்சிகள்‌ அனைத்தையும்‌ முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ சோதனைகள்‌ அனைத்தையும்‌ வென்று, தமிழ்‌ நாட்டு மக்களின்‌ நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது; இனியும்‌ விளங்கும்‌ என்பதை உறுதிபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?

கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…

38 minutes ago

12 ஆண்டுகள்.. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : முதலமைச்சரை சந்திக்க முடிவு!

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…

1 hour ago

பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!

காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…

2 hours ago

ஜூனியர் என்டிஆரின் கெரியருக்கு மூடு விழா? ஷூட்டிங்கையே முடக்கிப்போடும் சம்பவம்! அடப்பாவமே

உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…

2 hours ago

ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!

சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…

3 hours ago

This website uses cookies.