இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் வராததை உணர்ந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, திருமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் கொழும்புவில் பிரதமரின் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களும் ராஜபக்சே ஆதரவாளர்களை பதிலுக்கு தாக்கினர். இதனால், நாடு முழுவதும் வன்முறை மூண்டது. மேலும், ராஜபக்சேவின் வீடு உள்பட எம்பிக்கள், மேயர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும் இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக எடுக்கப்படும். வன்முறையை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.