திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநில பக்தர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவ திவ்ய தேசமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் வழக்கம் போல இன்று காலை ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர். அந்த சமயம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் நாங்கள் பெருமாளை கோவிந்தா கோஷத்துடன் தான் தரிசிப்போம் எனக் கூறி, ரங்கநாதரை தொடர்ந்து கோஷமிட்டு வழிபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரவி மற்றும் கோவில் பாதுகாவலர்கள் 3 பேரும் சேர்ந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒரு ஐயப்ப பக்தருக்கு ரத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது.
இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமாதானம் செய்தனர். அதேவேளையில், இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.