தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்தபோது 2 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
பின்னர் அவர்களும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் லூர்து பிரான்சிஸ் மகன்கள் அஜேய் ஆல்வின், மார்ஷல் ஏசுவடியான் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, மணற்கொள்ளையைத் தடுப்பதற்காகச் சமரசமின்றி துணிச்சலுடன் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இயற்கை வளங்களை அழித்திடும் மணற்கொள்ளை போன்ற சீர்கேடுகளை உடனடியாக தடுத்திடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.