குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 தேர்வுகளை எழுதி இருந்தார்.தேர்வில் அந்த மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் ஜூன் மாதம் நடந்த துணைத் தேர்வுகளை எழுதியிருக்கிறார். ஆனால், அந்த தேர்விலும் அவரால் இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொது தேர்வில் அவர் இயற்பியல் பாடத்தில் 21 மார்க் மட்டுமே பெற்றார். அதேபோல ஜூன் மாதம் நடந்த மறு தேர்விலும் அவரால் வெறும் 22 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது.
ஆனால் அந்த மாணவி நீட் தேர்வில்720க்கு 705 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில் 99.89% மதிப்பெண்களும் வேதியியலில் 99.14%, உயிரியலில் 99.14% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 99.94% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதன் மூலம் அவரால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இரண்டு முறை முயன்றும் அவரால் +2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அந்த மானவியால் கல்லூரியில் சேர முடியாத நிலை உருவாகி உள்ளது.
துணைத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்களால் அவரது நீட் மார்க் குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் வழக்கு நடக்கும் இந்த சூழலில் இந்த வழக்கைப் புறக்கணிக்க முடியாது. +2 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத மாணவி நீட் தேர்வில் இவ்வளவு அதிக மார்க் பெறுவது சாத்தியமற்றது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற மாணவி, +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ள நிகழ்வு நாடு முழுக்க பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.