10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் நாளை நடைபெற இருந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. இந்த சூழலில் 10 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான அறிவியல் வினாத்தாளும்,
12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாளும் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து காவல்துறையிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார்.இதைதொடர்ந்து வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.