நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. மும்பையில் இன்று நடந்து வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, களமிறங்கிய கில் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்சருக்கமாக பறக்க விட்டனர்.
இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 47 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, கில் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனிடையே, டக்கவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் ரோகித் ஷர்மா, 12வது வீரரான அஸ்வினை அழைத்து, பேட்டிங் செய்து கொண்டிருக்கும் கோலி, கில்லுக்கு ஒரு தகவலை சொல்லி அனுப்பினார்.
அஸ்வினும் களத்திற்கு சென்று இருவரிடமும் ஏதோ கூறினார். அதன்பிறகு, கில் மற்றும் கோலியும் மளமளவென ரன்களை குவித்து வந்தனர்.
இதனிடையே, ஆட்டத்தின் 23வது ஓவரில் கில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். 79 ரன்கள் குவித்திருந்த போது அவர் Retired hurt ஆகி வெளியேறினார். இதனால், அடுத்த பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் ஐயர் களத்திற்கு வந்தார். சிறப்பாக ஆடி வந்த கில் தசைபிடிப்பால் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.